Wednesday, March 28, 2012

தண்ணீர் - ஒரு சர்வரோக நிவாரணி

0 Comments
சர்.சி.வி.ராமன் (1888-1970) இந்தியாவில் பிறந்த ஒரு சிறந்த அறிவியல் அறிஞர். இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றவர்.. காடுகளை அழித்து, சுற்றுப்புறச் சூழலை நாமே கெடுத்துக் கொள்ளும் இன்றைய நவீன யுகத்தில் தண்ணீரின் முக்கியத்துவம் கொடுத்து எழுதிய புத்தகம் தான்.. (Water - The Elixir of life) இதில் தண்ணீர் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் தாவரங்கள் வாழ்வதற்கும் பெரிய அடிப்படை என்பதாலேயே அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்... இனி அவரது பார்வையில் இந்த புத்தகத்தில் உள்ளவற்றை சிறிது பார்க்கலாம்.

பொதுவாக பழைய காலங்களில் பார்கடலில் கடைந்து கிடைக்கப்பட்ட அமிர்தமே நமது வாழ்வில் கிடைக்கதற்கரிய பொருளாக, சர்வரோக நிவாரணியாக நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்காத ஒன்றையே நாம் தேடியுள்ளோம். ஆனால் தண்ணீரே உலக வாழ்வின் அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. தண்ணீரே உலகின் முன்னேற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் நிர்ணயித்துள்ளது எனச் சொன்னால் மிகை இல்லை.

தண்ணீர் இருக்கும் பகுதிகளே பூமிக்கு அதிக வனப்பைத் தருகின்றன, அது ஓடுகின்ற வெள்ளமாக இருந்தாலும் சரியே, குளம் குட்டைகளாக இருந்தாலும் சரியே.. அவைகளில் கால்நடைகள் தங்கள் தாகங்களை தீர்த்துக் கொள்கின்றன. பொதுவாக தென்னிந்தியப் பகுதிகளில் நீர்த்தேக்கங்களை அதிகமாகக் காணலாம். அவை எப்போதும் பார்வைக்கு விருந்தாகவே அமையும். ஆனால் அவை சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்பது ஒரு பெரும் குறை.

ஆழம் குறைவான ஏரிகளும், கண்மாய்களுமே அங்கு விவசாயத்திற்கு பெரிதும் உதவுபவையாக இருக்கின்றன. அப்பகுதிகளில் இருந்து சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்பது என்பது அழகான அனுபவம். மனிதனின் கண்ணுக்கு ஒப்பாக இயற்கையில் அமைந்த நீர்நிலைகளை ஒப்பிடலாம். சூரியன் உதிக்கும் போது தண்ணீரில் தெரியும் ஜொலிஜொலிப்பும், மறையும் போது இருக்கும் மந்தகாசமும் அற்புதம்.

தான் ஓடும் இடத்திற்குத் தகுந்தாற் போல் நிறத்தை மாற்றிக் கொள்வது தண்ணீருக்கு இருக்கும் ஆற்றலே.. மழையின் காரணமாக ஓடி வரும் தண்ணீர் அந்த மண்ணுடைய நிறத்தை வாங்கி கொண்டு அதன் நீறத்திலேயே நீர்நிலைகளை நிறைக்கின்றன. புழுதி நிறமும், செம்மண் நிறமுமாக ஓடும் தண்ணீர் கடலை அடைந்தால் மட்டும் நீல நிறத்தை அடைந்து விடுகின்றது. நீரோடும் நிலப்பகுதி முழுவதும் வளமானதாக மாறி விடுகின்றது.

மண்ணரிப்பு என்பது கவனிக்காமல் விட்டுவிடும் போது நமக்கு பெரும் அழிவையேத் தருகின்றது. அதிகப்படியான மழை, நிலச்சரிவு, நிலத்தை பாதுகாக்கும் மரங்களை வெட்டுவது போன்றவையே நிலச்சரிவுக்கு காரணமாக அமைகின்றன. தண்ணீரின் ஓட்டத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான விவசாயத்தினை மேற்கொள்ள மண்ணரிப்புகளில் நாம் நிலத்தைக் காக்க வேண்டும். மண்ணரிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் பாதுகப்பு அரண்கள், நீரோட்டப் பாதைகளில் தடுப்பை ஏற்படுத்தாமல், கரையோரங்களில் மரங்களை நட்டு தடுக்கலாம்.

தண்ணீரே மனித, மிருக, தாவரங்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இவைகளின் உடலில் பெரும்பகுதி நீரினால் ஆனது. தண்ணீர் இல்லாமல் வளர்ச்சி என்பது நடக்கவே இயலாதது. மண்ணில் இருக்கும் நீரே தாவர வளர்ச்சிக்கும், மனிதனுக்கு அடிப்படைத் தேவை.

தண்ணீர் சிக்கனம் மூலம் வருங்காலத்திற்கான நீரை சேமிப்பது என்பது நமது வாழ்வின் அடிப்படை பண்பாக இருக்க வேண்டும். நீர் ஊற்றுக்களே நம்மை காக்கக் கூடியவைகளாக அமையும். ஆனாலும் மழை நீரும், மழைகளில் இருந்து வரும் நீருமே நமக்கு கிடைக்கின்றன. இன்னும் பருவமழையை நம்பியே இன்றைய இந்தியாவின் அடிப்படை விவ்சாயம் இருக்கும் சூழலில் பருவமழை பொய்த்துப் போகும் போது கடும் நஷ்டங்களை எதிர் கொள்ள நேரிடுகின்றது.

நதி நீரை தேவையான பகுதிகளை எடுத்துச் செல்வது என்பது இன்றைய இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. சரியான திட்டமிடல் மூலம் இதைச் செய்தால் வனாந்திரங்களும், பாலைவனமும் சோலைவங்களாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மரங்கள் அழிவதும், அழிக்கப்படுவதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம். மரம் நடுவதை திறம்பட செய்வதும், தேவையான அளவு காடுகளை உருவாக்குவதும், இன்றைய இந்தியாவின் அவசரத் தேவைகளில் ஒன்று. காடுகள் அதிகமானால் மண்ணரிப்பு தடுக்கப்படுவதுடன், மழை நீரை பூமியில் சேமித்து வைக்கவும் உதவும்.

நதி நீர் ஓட்டத்தை செம்மைப்படுத்துவதன் மூலம் நீரை சேமித்து விவ்சாயத்தைப் பாதுகாக்கலாம். நதி நீரை தேக்கி வைத்து அதன் மூலம் நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்கலாம். இன்றைய காலத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு மின்சாரம் ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கின்றது.

ஆழ்துளைக் குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விஷயம். பூமிக்குள் தேங்கி இருக்கும் நீரே ஜீவராசிகள் அனைத்திற்கும் அடிப்படையானது. தண்ணீர் பற்றிய ஆராய்ச்சிகளும், தண்ணீரின் குணாதிசயங்களும் என்றென்றும் ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதாகவே என்றென்றும் இருக்கும்.

சர்.சி.வி. ராமனின் எழுத்தும் மிகவும் சுருக்கமானவைகளாகவும், படிப்பதற்கு மிகவும் புரியக் கூடியவைகளாகவும், கருத்தைப் பாமரரும் விளங்கிக் கொள்ளும் வண்ணமாகும் இருக்கும்.

பின்குறிப்பு: இது ஒரு கல்வி சம்பந்தமான தேவைகளுக்காக எழுதிக் கொண்டிருப்பது. புத்தகத்தை எழுதியவரின் பார்வை இதில் வரவில்லை என்றால் எம் மொழிபெயர்ப்பின் தவறே.




Related Posts with Thumbnails

Labels

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com